2010/08/14

வீணே பலி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 64 ராகம்: ஆபேரி


வீணே பலிகவர் தெய்வங்கள் பால்சென்று மிக்கவன்பு
பூணே னுனக்கன்பு பூண்டுகொண்டேன் நின்புகழ்ச்சி யன்றிப்
பேணே னொருபொழு துந்திருமேனிப் பிரகாச மன்றிக்
காணே னிருநில முந்திசை நான்குங் ககனமுமே.

உன் அழகான மேனியின் ஒளியைப் போல் நான்கு திசைகளிலும் விண்ணிலும் மண்ணிலும் அகண்ட வானிலும் நான் கண்டதில்லை; உன் மேல் பக்தி பூண்டபின் வீணாக உயிர் வாழ வைக்கும் பிற தெய்வங்களை நான் விரும்பவில்லை; உன் பெருமையையே போற்றி வணங்கிக் கொண்டிருப்பேன்.

'வீணே பலி கவர்' என்பதற்கு 'வீணாக உயிர்ப்பலி வாங்கும்' என்றும் பலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள். இங்கே 'பலிகவர்' என்பது எதிர்மறையில் வருகிறது என்று நினைக்கிறேன். 'உயிர் வாழ்வது அபிராமியின் புகழைப் பாடுவதற்கே' என்றும் 'அபிராமி அடியவருக்கு பிறவாமை கிடைக்கும்' என்றும் பட்டர் நம்பியதால் இங்கே தன் வாழ்வின் பொருள் விளங்கியது போல் பாடுகிறார். மற்ற தெய்வங்களை நம்பி வாழ்வதில் ஒரு பயனுமில்லை என்ற கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்துகிறார். 'உயிரை எடுக்கும் தெய்வமாகவே இருந்தாலும், மீண்டும் பிறவா நிலையைக் கொடுக்கக் கூடியவள் அபிராமி மட்டும் தான்; மற்ற தெய்வங்களை நம்பி உயிரைக் கொடுத்தால் பிறவாமை கிடைக்காது' என்று பட்டர் பாடுவதாகவும் பொருள் கொள்ளலாம். ககனம்: வெளி, அண்டம், வானம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)