skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/09/19
குழையைத் தழுவிய...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
நூல்:100 | ராகம்:மத்யமாவதி
குழையைத் தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கரும்பு வில்லும்
விழையப் பொருதிறல் வேரியம்பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சிலெப்போதும் உதிக்கின்றவே!
ஒளி வீசும் புன்னகையும் மானை விட அழகியக் கண்களும் கொண்ட, கொடி போன்ற அழகியே (அபிராமி)! தேனை விட இனிமையான, மணம் வீசும், மலர்களால் நெருக்கித் தொடுக்கப்பட்ட அம்புகளையும் கரும்பு வில்லையும் ஏந்தியக் கைகளைத் தாங்கி நிற்கும், மூங்கிலை விடத் திடமான உன் வளைந்த தோள்களில், நீ அணிந்திருக்கும் கொன்றை மலர்மாலை உன் காதுகளையும் மார்பையும் தொட்டுத் தழுவுகிறது; இந்தக் காட்சியே என் மனதுள் நிலையாகத் தோன்றுகிறது.
குழை என்றால் காது. கழை என்றால் மூங்கில். விழைய என்றால் நெருங்கிய, நெருக்கமான என்று பொருள். திறல் என்றால் போர் - இங்கே அம்பு எனும் போர்க்கருவியைக் குறிக்கிறது. வேரி என்றால் தேன். உழை என்றால் மான். தமிழ் மொழியின் சிறப்பு 'ழ'கரம் என்பார்கள். அருமையான தமிழந்தாதி தந்திருக்கும் பட்டர், நூலின் நிறைவுப்பாடலில் 'ழ'கர எதுகையைப் பயன்படுத்தியது தற்செயலோ திட்டமோ எப்படியாயினும் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கிறது.
'உதிக்கின்ற செங்கதிர்' என்று தொடங்கிய நூலை 'எப்போதும் உதிக்கின்றவே' என்று முடித்து, முழுமையான அந்தாதிப் பாமாலையைத் தொடுத்து வழங்கியிருக்கிறார் பட்டர். அபிராமி தன் நெஞ்சில் என்றுமே நிலைத்திருக்கிறாள் என்கிறார்.
அபிராமியின் அழகுக் கோலத்துடன், பட்டருக்குப் பிறவாமை கிட்ட உதவி செய்த அருந்தமிழும் என்றும் நிலைத்திருக்கட்டும்.
பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
>>>
நூல்பயன் | ஆத்தாளை எங்கள்...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
►
ஜூலை
(31)
►
ஆகஸ்ட்
(31)
▼
செப்டம்பர்
(21)
அளியார் கமலத்தில்...
விரவும் புதுமலர்...
உடையாளை ஒல்கு...
பார்க்குந் திசைதொறும்...
மால் அயன்...
மொழிக்கும் நினைவுக்கும்...
பரமென்று உனை...
சிறக்கும் கமலத்திருவே...
வருந்தா வகை...
மெல்லிய நுண்ணிடை...
பதத்தே உருகிநின்...
நகையே இஃதிந்த...
விரும்பித் தொழுமடியார்...
நன்றே வரினும்...
கோமள வல்லியை...
ஆதித்தன் அம்புலி...
தைவந்து நின்னடி...
குயிலாய் இருக்கும்...
குழையைத் தழுவிய...
ஆத்தாளை எங்கள்...
அந்தம்
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை