skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/09/10
மெல்லிய நுண்ணிடை...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி:நூல் 91 ராகம்: ஆரபி
மெல்லிய நுண்ணிடை மின்னனையாளை விரிசடையோன்
புல்லிய மென்முலைப் பொன்னனையாளைப் புகழ்ந்துமறை
சொல்லிய வண்ணம் தொழுமடியாரைத் தொழுமவர்க்கும்
பல்லிய மார்த்தெழ வெண்பகடூறும் பதந்தருமே.
விரிந்த சடையுடைய சிவபெருமான் தழுவிய பொன்னைப் போல் சிவந்த மென்மையான முலைகளையும், ஒளி வீசி மறையும் மின்னலைப் போல் மிக நுண்ணிய இடை கொண்டவளுமான அபிராமியை வணங்க வேண்டிய முறைப்படித் தொழும் அடியார்களுக்கு மங்கல இசைக்கருவிகள் முழங்க வெண்யானைகள் நடமாடும் தேவலோகத்தில் இடம் கிடைக்கும்.
ஏற்கனவே பலமுறை சொன்ன கருத்தை மீண்டும் சொல்கிறார் பட்டர். சிலருக்கு ஒரு முறை சொன்னால் விளங்கும். சிலருக்கு எத்தனை முறை சொன்னாலும் விளங்காது. விளங்காதவர்களுக்கு எப்படி விளங்க வைப்பது? திரும்பத் திரும்பச் சொல்லுவதால். படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம், அதனால் தினமும் படிக்க வேண்டும் என்று பலமுறை சொல்லலாம். அதே செய்தியை, தினமும் படித்தால் நல்ல சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து வசதியோடு வாழலாம் என்றும் சொல்லலாம். செய்தி ஒன்று தான். படிக்க வேண்டும் என்பதே. பட்டர் உபயோகிப்பதும் அதே முறையை. அபிராமியை வணங்க வேண்டும் என்பது செய்தி. வணங்கினால் பிறவாமை கிடைக்கும் என்பது பலன். அதையே பட்டும் பொன்னும் புரள, இசைக்கருவிகள் முழங்க, வெள்ளை யானைகள் நடமாடும் சொர்க்கலோகத்தில் வசிக்கலாம் என்றும் சொல்லலாம். பிறவாமையைச் சுலபமாகப் புரிந்து கொள்ளாத அறிவு, சொகுசான தேவலோக வாழ்வைச் சுலபமாகப் புரிந்து கொள்கிறது அல்லவா? அதனால் அபிராமியை வணங்கினால் தேவலோகம் கிடைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறார்.
புல்லிய என்றால் இணைந்த, புணர்ந்த, தழுவிய என்று பொருள். இங்கே சிவன் தழுவிய மார்பை உடையவள் என்ற பொருளில் வருகிறது. சிவனோடு இணைந்த மார்பினை, அதாவது, அர்த்தநாரி வடிவினை உடையவள் என்றும் பொருள் கொள்ளலாம். பல்லியம் என்றால் மங்கள இசை, இசைக்கருவிகள் என்று பொருள். பகடு என்றால் யானை. பதம் என்றால் பதவி, இடம். 'ப' வரிசையில் ஒரே பாடலில் எத்தனை அருஞ்சொல்!
இந்தப் பாடல் தொடங்கி நான்கு பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த ஆரபி ராகத்தில் அமைந்திருக்கின்றன.
பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
►
ஜூலை
(31)
►
ஆகஸ்ட்
(31)
▼
செப்டம்பர்
(21)
அளியார் கமலத்தில்...
விரவும் புதுமலர்...
உடையாளை ஒல்கு...
பார்க்குந் திசைதொறும்...
மால் அயன்...
மொழிக்கும் நினைவுக்கும்...
பரமென்று உனை...
சிறக்கும் கமலத்திருவே...
வருந்தா வகை...
மெல்லிய நுண்ணிடை...
பதத்தே உருகிநின்...
நகையே இஃதிந்த...
விரும்பித் தொழுமடியார்...
நன்றே வரினும்...
கோமள வல்லியை...
ஆதித்தன் அம்புலி...
தைவந்து நின்னடி...
குயிலாய் இருக்கும்...
குழையைத் தழுவிய...
ஆத்தாளை எங்கள்...
அந்தம்
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை