skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/09/09
வருந்தா வகை...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி:நூல் 90 ராகம்: ரஞ்சனி
வருந்தா வகை என்மனத் தாமரையினில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தா தொரு பொருளிலை விண்மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியளே.
கடலையும் அமுதாக்கி தேவர்களுக்கு வழங்கும் மென்மையான மனமுடையவள் (அபிராமி), என் மனமென்னும் தாமரையைத் தனக்குப் பழக்கமான இருப்பிடம போல் எண்ணிக் குடிபுகுந்திருப்பதால் இனி எனக்கு வேண்டியது வேறு எதுவும் இல்லை.
'விண்மேவும் புலவர்' இங்கே தேவர்களைக் குறிக்கிறது. வேலை என்றால் கடல். 'வேலை மருந்தானது' இங்கே பாற்கடல் கடைந்த அமுதத்தைக் குறிக்கிறது.
வேலை மருந்தாக்கியதை உவமையாகச் சொல்லியிருப்பது சுவையானது. பாற்கடலின் சிறப்பு எப்படி வெளிப்பட்டது? அதிலிருந்த அமுதத்தினால். அமுதம் இல்லையென்றால் பாற்கடல் சாதாரணக் கடல் தான். 'எந்தச் சிறப்பும் இல்லாத பாழ்கடலான என் மனதில் அமுதம் போல் அபிராமி குடியிருக்கிறாள் - அதனால் என் மனதுக்கும் சிறப்பு வந்துவிட்டது' என்று பட்டர் புளங்காகிதம் அடைகிறார். அதன் வெளிப்பாடே இந்தப் பாடல்.
அபிராமியை அடைக்கலம் என்று எண்ணியவர், எண்ணி உருகியவர், உருகித் துதித்தவர் இனி எதுவுமே தேவையில்லை என்கிறார். தன் மனதில் அபிராமி குடியேறிவிட்டாள் என்ற மகிழ்ச்சியில் திளைக்கிறார். கடவுளே மனதில் குடியிருக்கும் பொழுது மனம் வேறு என்ன நினைக்க வாய்ப்பிருக்கிறது?
பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
►
ஜூலை
(31)
►
ஆகஸ்ட்
(31)
▼
செப்டம்பர்
(21)
அளியார் கமலத்தில்...
விரவும் புதுமலர்...
உடையாளை ஒல்கு...
பார்க்குந் திசைதொறும்...
மால் அயன்...
மொழிக்கும் நினைவுக்கும்...
பரமென்று உனை...
சிறக்கும் கமலத்திருவே...
வருந்தா வகை...
மெல்லிய நுண்ணிடை...
பதத்தே உருகிநின்...
நகையே இஃதிந்த...
விரும்பித் தொழுமடியார்...
நன்றே வரினும்...
கோமள வல்லியை...
ஆதித்தன் அம்புலி...
தைவந்து நின்னடி...
குயிலாய் இருக்கும்...
குழையைத் தழுவிய...
ஆத்தாளை எங்கள்...
அந்தம்
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை