skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/09/13
விரும்பித் தொழுமடியார்...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி:நூல் 94 ராகம்: ஆரபி
விரும்பித் தொழுமடியார் விழிநீர்மல்கி மெய்புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி அறிவிழந்து
சுரும்பிற் களித்து மொழிதடுமாறி முன்சொன்ன எல்லாம்
தரும்பித் தராவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.
அபிராமியை மனதில் வரித்து விரும்பி வணங்குவோர், கண்ணில் நீர்மல்கி, உளளம் முழுதும் பரவசமாகித் தோன்றிய மகிழ்ச்சிப் பெருக்கின் இனிமையில் தேனுண்ணும் வண்டைப் போல் தன்னை மறந்துக் களித்து, எண்ணமும் மொழியும் ஒன்றாய்ச் சேராத பித்தர் போல் நடந்து கொள்வார்கள்; எனினும் அவள் வழி நல்வழியே.
சுரும்பு என்றால் வண்டு. தேனுண்ணும் வண்டு மாமலரைக் கண்டால் எப்படி இருக்கும்? பட்டர் அபிராமியைக் கண்டது போலிருக்கும்.
எளிமையான பாடல். அபிராமி அடியவர்கள் முன்னுக்குப் பின் முரணாகவும், உன்மத்தர் போலவும், பித்தராகவும், பரவசப்பட்டும் இருப்பார்கள் என்று அடையாளம் காட்டுகிறார். அப்படித் தோன்றினாலும் அவ்வடியார்கள் பற்றியிருப்பது அபிராமியின் பாதங்களாகையினால், அவர்கள் அபிராமியின் வழியிலேயே போவார்கள் என்றும் சொல்கிறார்.
ஒரு எளிமையான, சிறப்பான உட்பொருளும் இருக்கிறது. 'ஐயா, நான் தவறாகத் திதி சொன்னதால் என்னைப் பித்தனென்று சொல்லிப் பிணமாக்கவும் முடிவு செய்தீர். என்னைப் பித்தனாக்கியது சாதாரண இவ்வுலகப் பற்றா? இல்லையே? பற்றற்றவள் பற்று. அதனால் என் வழி நல்வழி தான் என்பது நிரூபிக்கப்பட்டது பார்த்தீர்களா?' என்று பட்டர் தன்னை ஒறுத்தவர்களைக் கேட்பது போலிருக்கிறது. 'இனியாவது அபிராமி அடியார்களை அடையாளம் கண்டு அவர்கள் செல்லும் வழியில் சேருங்கள்' என்று அவர் சொல்வது உட்பொருள்.
இந்தப் பாடலைப் பாடும் பொழுது பட்டர் எத்தனை பரவசத்துடன் இருந்திருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிப் பாடியிருக்கிறார்.
என் அம்மா குரலில் இந்தப் பாடலை நான் கேட்கும் போதெல்லாம் பரவசப்பட்டிருக்கிறேன்.
பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
►
ஜூலை
(31)
►
ஆகஸ்ட்
(31)
▼
செப்டம்பர்
(21)
அளியார் கமலத்தில்...
விரவும் புதுமலர்...
உடையாளை ஒல்கு...
பார்க்குந் திசைதொறும்...
மால் அயன்...
மொழிக்கும் நினைவுக்கும்...
பரமென்று உனை...
சிறக்கும் கமலத்திருவே...
வருந்தா வகை...
மெல்லிய நுண்ணிடை...
பதத்தே உருகிநின்...
நகையே இஃதிந்த...
விரும்பித் தொழுமடியார்...
நன்றே வரினும்...
கோமள வல்லியை...
ஆதித்தன் அம்புலி...
தைவந்து நின்னடி...
குயிலாய் இருக்கும்...
குழையைத் தழுவிய...
ஆத்தாளை எங்கள்...
அந்தம்
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை