skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/09/06
மொழிக்கும் நினைவுக்கும்...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி:நூல் 87 ராகம்: ரஞ்சனி
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாதநின் திருமூர்த்தி எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும் படியொரு பாகம் கொண்டாளும் பராபரையே.
நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்துத் தன்னுடைய தவ வலிமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய சிவனை அந்த உலகமே நகைக்கும் விதமாக அவருடைய தவத்தைக் கலைத்தது மட்டுமல்லாது அவருடைய உடலிலும் பாதியை எடுத்துக்கொண்ட இறைவியே, சொல்லில் அடங்காத, நினைத்துப் பார்க்கவும் இயலாத உன் அழகு என்னுடைய நல்வினைப்பயனால் என் கண்களுக்கு அரிய காட்சியானது.
'விழியால் மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதம்' பற்றிச் சிவராத்திரியின் கதை வழியாக முன்னர் பார்த்தோம். சிவனின் தவத்தைக் கலைக்க தேவர்கள் கூட்டு சேர்ந்து தாஜா செய்து அனுப்பிய மன்மதனைச் சிவன் பொசுக்கியதும், பார்வதி மன்மதனின் மலரம்புகளையும் கரும்புவில்லையும் எடுத்துக்கொண்டு தானே சிவனை எதிர் கொண்டதும், பார்வதியின் அழகைக் கண்டதும் தான் செய்த தவமெல்லாம் இவளைக் காணவேயன்றோ என்று சிவன் ஒரேயடியாக நிலைமாறி பார்வதியின் பின்னே போனதும் சுவையான சிருங்காரக் கதை. சிவபுராணத்தில் விவரமாகப் படிக்கலாம். மன்மதனை எரித்து வித்தை காட்டிய சிவனின் வீரம் அபிராமியின் அழகினால் சொத்தையானது என்று பட்டர் சொல்கிறார். சிவனின் தவத்தைக் குலைத்து, தனித் தவமே இனிச் செய்ய இயலாதபடி அவர் உடலில் பாதியை எடுத்துக்கொண்டு ஆளும் அபிராமியின் அழகைச் சொல்லால் விவரிக்க முடியாது, ஏனென்றால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத அழகு என்கிறார். நினைத்துப் பார்த்தால் தானே சொல்லில் வடிப்பது? அப்படிப்பட்ட அழகி தன் கண்களுக்குக் காட்சியானது வினைப்பயன் என்கிறார். பராபரை என்றால் கடவுள், இறைவி.
எளிமையான பாடலாக இருந்தாலும், பட்டர் பாடலைச் சரியாக முடிக்காமல் விட்டது போல் தோன்றவில்லை? 'வெளி நின்றதால்' என்று தொக்கி நிற்பது போல் ஒலிக்கிறது பாடல். பட்டர் அறிவுக்கு எட்டாத அபிராமியின் அழகைப் போல், ஒரு வேளை என் அறிவுக்கு எட்டாத பட்டரின் பொருளழகாகவும் இருக்கலாம் என்று நினைத்தபோது விவரம் புரிந்தது. இங்கே நின்றதால் என்பதை 'நின்றது+ஆல்' எனப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். 'என் விழிக்கும் வினைக்கும் வெளி நின்றது, ஆல்' எனப் பிரியும் பொழுது, தொக்கி நிற்பதும் சொக்க வைக்கும் தமிழ் என்று புரியும். ஆல் என்பதற்கு ஆமாம் என்று பொருள். 'என் விழிக்கும் வினைக்கும் வெளி நின்றது, உண்மை தான்' என்ற பொருளில் பாடியிருக்கிறார் பட்டர்.
பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
►
ஜூலை
(31)
►
ஆகஸ்ட்
(31)
▼
செப்டம்பர்
(21)
அளியார் கமலத்தில்...
விரவும் புதுமலர்...
உடையாளை ஒல்கு...
பார்க்குந் திசைதொறும்...
மால் அயன்...
மொழிக்கும் நினைவுக்கும்...
பரமென்று உனை...
சிறக்கும் கமலத்திருவே...
வருந்தா வகை...
மெல்லிய நுண்ணிடை...
பதத்தே உருகிநின்...
நகையே இஃதிந்த...
விரும்பித் தொழுமடியார்...
நன்றே வரினும்...
கோமள வல்லியை...
ஆதித்தன் அம்புலி...
தைவந்து நின்னடி...
குயிலாய் இருக்கும்...
குழையைத் தழுவிய...
ஆத்தாளை எங்கள்...
அந்தம்
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை