skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/09/03
உடையாளை ஒல்கு...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி:நூல் 84 ராகம்: ஹடானா
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதி செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ் சடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கென்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே.
(அபிராமி) சிவந்த பட்டு உடையணிந்தவள், ஒளி வீசும் பிறை நிலாவைத் தலையில் சூடியவள், நூல் போல் மெலிந்த இடை கொண்டவள், எங்கள் தலைவனாகிய சிவபெருமானின் பக்கமிருக்கும் சக்தியானவள், நம்பிக்கையற்ற தீயவரின் உள்ளத்தில் குடியேறாதவள்; எனக்குப் பிறவாமை அளித்த இவளை அடையாளம் கண்டு, உங்களுக்கும் இனிப் பிறவாமை கிடைக்கும்படி வழி செய்து கொள்ளுங்கள்.
அபிராமியைக் கண்ட ஆனந்தத்தில், அவளை நமக்கு அடையாளம் சொல்கிறார் பட்டர். தான் கண்ட காட்சி, தான் பெற்ற இன்பம் - நாமும் பெற விரும்புகிறார்.
அபிராமி அந்தாதி பாடல்களில் பட்டர் வரிக்கு வரி சிலேடை உபயோகித்திருப்பது இந்தப் பாடலில் தான் என்று நினைக்கிறேன். உடையாள் என்றால் கடவுள்; செம்பட்டு உடையாள் என்பது சிவந்த பட்டாடையை உடுத்தியவள் என்ற பொருளில் வருகிறது. ஒல்கும் என்றால் மேலணிம், சூடும் என்று பொருள். ஒளிர் மதி சடையாள் என்பது பிறை நிலாவைச் சூடியவள் என்ற பொருளில் வருகிறது; நெஞ்சடையாள் என்பது நெஞ்சு+அடையாள் எனப் பிரிந்து, நெஞ்சத்தில் சேராதவள் என்ற பொருளில் வருகிறது. நுண்ணூல் இடையாள் என்பது மிக மெல்லிய நூல் போன்ற இடை கொண்டவள் என்ற பொருளில் வருகிறது; பெம்மான் இடையாள் என்பதை இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம். இடை என்பதற்கு பக்கம், பாகம் என்ற பொருளில் சிவபெருமானின் பக்கமிருப்பவள், இடதுபாகத்தில் இருப்பவள் என்று பொருள். இடை என்பதற்கு வலிமை, சக்தி என்றும் பொருள். சிவபெருமானின் சக்தியானவள் என்ற பொருளில் வருகிறது.
பெம்மான் இடையாளை என்று பாடியிருப்பதால், அபிராமி சிவனுடன் சேர்ந்து அர்த்தநாரி வடிவத்தில் அவருக்குக் காட்சியளித்திருப்பதாகப் பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
உருகிப் பாடியிருக்கிறார் அம்மா. அடிக்கடி கேட்ட சுவையான பாடல்.
பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
►
ஜூலை
(31)
►
ஆகஸ்ட்
(31)
▼
செப்டம்பர்
(21)
அளியார் கமலத்தில்...
விரவும் புதுமலர்...
உடையாளை ஒல்கு...
பார்க்குந் திசைதொறும்...
மால் அயன்...
மொழிக்கும் நினைவுக்கும்...
பரமென்று உனை...
சிறக்கும் கமலத்திருவே...
வருந்தா வகை...
மெல்லிய நுண்ணிடை...
பதத்தே உருகிநின்...
நகையே இஃதிந்த...
விரும்பித் தொழுமடியார்...
நன்றே வரினும்...
கோமள வல்லியை...
ஆதித்தன் அம்புலி...
தைவந்து நின்னடி...
குயிலாய் இருக்கும்...
குழையைத் தழுவிய...
ஆத்தாளை எங்கள்...
அந்தம்
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை