skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/09/11
பதத்தே உருகிநின்...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி:நூல் 92 ராகம்: ஆரபி
பதத்தே உருகிநின் பாதத்திலே மனம்பற்றி உந்தன்
இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனியான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன் அவர்போன வழியுஞ் செல்லேன்
முதல்தே வர்மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே.
மூத்த கடவுளர் மூவருடன் ஏனையவரும் போற்றும் மலர் பூப்பது போல் புன்னகையை உடையவளே (அபிராமி) உன் பல்வேறு பெயர்களை மனமுருகிச் சொல்லி வழிபட்டு உனக்குப் பணிவிடை செய்யும் என்னை அடிமை கொண்டாய்; இனி பிறிதொரு மதத்தையோ அவர்கள் கடைபிடிக்கும் வழிகளையோ நான் பின்பற்ற மாட்டேன்.
நிலவு தோன்றலுக்கு முன், நிலவு தோன்றலுக்குப் பின் என்று பட்டர் பாடல்களைப் பகுத்தால், நி.தோ முன் பாடிய பாடல்களின் கருத்துக்கள் சிலவற்றை நி.தோ பின்னும் பாடியிருக்கிறார். காரணம், தான் சொன்னது சொன்னபடி நடந்தது என்பதை வலியுறுத்த மட்டுமல்ல, மற்றவரும் அப்படி அபிராமியின் அருளை அடைய முடியும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிக்கவும் பாடினார் என்று நினைக்கிறேன்.
அபிராமியின் பெயர்களைச் சொல்லி வழிபட்டதன் பலன் கிடைத்து விட்டதால் அதை வலியுறுத்திச் சொல்கிறார். இனியொரு மதம் வேண்டேன் என்று அவர் சொல்வதன் காரணம் தான் இன்னொரு மதத்தையோ முறையையோ நினைக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் மட்டுமல்ல, அபிராமியை வணங்குவதால் சொன்னபடி அருளும் பிறவாமையும் கிடைக்கும் என்பதை வலியுறுத்தவே முன்பே சொன்ன கருத்தை மீண்டும் இந்தப் பாடலில் வலியுறுத்துகிறார்.
பதத்தே என்றால் அபிராமியின் பல பெயர்கள். முதல் தேவர் மூவர் இங்கே பிரம்மா விஷ்ணு சிவனைக் குறிக்கிறது.
பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
►
ஜூலை
(31)
►
ஆகஸ்ட்
(31)
▼
செப்டம்பர்
(21)
அளியார் கமலத்தில்...
விரவும் புதுமலர்...
உடையாளை ஒல்கு...
பார்க்குந் திசைதொறும்...
மால் அயன்...
மொழிக்கும் நினைவுக்கும்...
பரமென்று உனை...
சிறக்கும் கமலத்திருவே...
வருந்தா வகை...
மெல்லிய நுண்ணிடை...
பதத்தே உருகிநின்...
நகையே இஃதிந்த...
விரும்பித் தொழுமடியார்...
நன்றே வரினும்...
கோமள வல்லியை...
ஆதித்தன் அம்புலி...
தைவந்து நின்னடி...
குயிலாய் இருக்கும்...
குழையைத் தழுவிய...
ஆத்தாளை எங்கள்...
அந்தம்
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை