skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/09/01
அளியார் கமலத்தில்...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி:நூல் 82 ராகம்: ஹடானா
அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்
களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடினெங்ஙனே மறப்பேனின் விரகினையே?
தாமரை மலர் போன்ற குளிர்ச்சியான தெய்வப்பெண்ணே! இவ்வுலகும் அண்டங்களும் எல்லாமே உன்னுடைய அழகின் ஒளியாக விளங்குவதை எண்ணும் பொழுது வானையும் தாண்டிக் கரைமீறும் அளவுக்கு என் உடலும் மனமும் களிப்புற வைக்கும் உன் திறனை எப்படி மறக்க முடியும்?
நிலவையும் அபிராமியையும் கண்ட மகிழ்ச்சியில் தொடர்ந்து பாடுகிறார் பட்டர். அண்டம் முழுதும் நிறைந்திருப்பது அபிராமியின் ஒளி என்பதை உணர வைத்து மகிழச் செய்வதும் அபிராமி தான் என்பது பாடலின் சாரம்.
அளியார் என்பதை அளி+ஆர் என்று பிரிக்க வேண்டும். 'அளி ஆர் கமலத்தில்' என்பதற்கு குளிர்ந்த தாமரை போன்றவளே என்று பொருள் சொல்லியிருக்கிறேன். பட்டர் பாடுவது அபிராமியின் அருளைப் பற்றி. குளிர்ச்சி அருளுக்கு ஆகி வருவதால் அப்படிப் பொருள் சொல்லியிருக்கிறேன். அளி என்பதற்கு வண்டு என்றும் பொருள். அந்த வகையில் 'வண்டுகள் மொய்க்கும் தாமரை' என்றும் பொருள் சொல்லலாம். வண்டுகள் மொய்க்கும் தாமரை மேல் அமர்ந்தவளே/தாமரையைப் போன்றவளே உன் அருளை எண்ணிக் களித்தேன் என்றும் பொருள் கொள்ளலாம். (வண்டு மொய்க்கும் தாமரை போல் அடியார்கள் மொய்க்கும் அபிராமி என்று பொருள்). கரணம் என்பதற்கு உடல், மனம், தந்திரம் என்று பல பொருளுண்டு. விரகு என்றால் திறமை என்று பொருள்.
'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி...கோனாகி யானெனதென்றவரைக் கூத்தாட்டுவானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே' எனும் திருச்சதகப் பாடலில் மாணிக்கவாசகர் சொல்லியிருக்கும் ஏறக்குறைய இதே கருத்து நினைவுக்கு வருகிறது.
எளிமையான பாடல், இனிமையான ராகம்.
பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
►
ஜூலை
(31)
►
ஆகஸ்ட்
(31)
▼
செப்டம்பர்
(21)
அளியார் கமலத்தில்...
விரவும் புதுமலர்...
உடையாளை ஒல்கு...
பார்க்குந் திசைதொறும்...
மால் அயன்...
மொழிக்கும் நினைவுக்கும்...
பரமென்று உனை...
சிறக்கும் கமலத்திருவே...
வருந்தா வகை...
மெல்லிய நுண்ணிடை...
பதத்தே உருகிநின்...
நகையே இஃதிந்த...
விரும்பித் தொழுமடியார்...
நன்றே வரினும்...
கோமள வல்லியை...
ஆதித்தன் அம்புலி...
தைவந்து நின்னடி...
குயிலாய் இருக்கும்...
குழையைத் தழுவிய...
ஆத்தாளை எங்கள்...
அந்தம்
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை