skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/08/28
செப்பும் கனகக்கலசமும்...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி:நூல் 78 ராகம்: பைரவி
செப்பும் கனகக் கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி அணி தரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே.
தங்கமும் செம்பும் சேர்த்தக் கலசம் போன்ற நறுமணச்சாந்து பூசிய முலைகள், முத்தும் வைரமும் கலந்து செய்த காதணிகள், குளிர்ச்சியான அருள் விழிகள், பவள இதழ்கள், நிலவு முகம், (இவையனைத்தும்) உடைய கொடி போன்ற அபிராமியின் அழகை என் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் துணையாகக் கொண்டேன்.
'அருள் விழியே அபிராமி, உன் அழகை இரு கண்களில் எழுதி வந்தேன்' என்று பாடியிருக்கிறார் பட்டர்.
'அணி தரளக் கொப்பும் வயிரக் குழையும்' என்பதை 'வைரத்தரளக் குழை கொப்பு அணியும்' என்று பிரிக்க வேண்டும். தரளம் என்றால் முத்து. குழை என்றால் காது. கொப்பு என்றால் காதணி, தோடு, தாடங்கம். முத்து வெண்மையான நிறமுடையது; வைரம் கண்ணைக் கூசவைக்கும் ஒளியுடையது. இரண்டும் கலந்த காதணி இங்கே முழு நிலவுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சூரிய சந்திரனை காதணியாகக் கொண்டவள் என்று முன்பே பாடியிருக்கிறார். நிலவு குளிர்ச்சியைத் தரக்கூடியது. அருள் பொங்கும் கண்களைக் கொண்ட நிலவு முகம் என்று பாடுகிறார். இந்தப் பாடல் முழுக்க நிலவை நினைவுபடுத்திப் பாடுவது போலிருக்கிறது. 'அபிராமியே நிலவு; அபிராமி எனும் இந்த நிலவை நான் பார்த்தால், அது எனக்கென வந்தது போலிருக்கும்' என்று பாடியிருக்கிறார். கொழுமை என்றால் குளுமை. இங்கே அருளைக் குறிக்கிறது. கொழுங்கடை என்பது இங்கே கடைவிழியின் குளுமையான அருள் வீச்சைக் குறிக்கிறது. துப்பு என்றால் பவளம். இங்கே உதடுகளைக் குறிக்கிறது. (துப்பு என்ற சொல்லுக்கு பல அரும் பொருளுண்டு. சொற்சிலம்பாட்டம் ஆடியிருக்கும் வள்ளுவரின் குறள் நினைவுக்கு வருகிறது)
'பாட்டுக்கு பாட்டு நிலவை நினைவுபடுத்தி வருகிறேன், இனிமேல் தாளாது' என்று பாடுகிறாரா? காரணம் இருக்கிறது. நிலவை நினைவுபடுத்தியது இது தான் கடைசி முறை. அடுத்த பாடலில் நிலவு வந்து விடுகிறது.
பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
►
ஜூலை
(31)
▼
ஆகஸ்ட்
(31)
அரணம் பொருள்...
வையம் துரகம்...
சின்னஞ் சிறிய...
இல்லாமை சொல்லி...
மின்னாயிரம் ஒரு...
ஒன்றாயரும்பிப் பலவாய்...
அய்யன் அளந்தபடி...
அருணாம் புயத்தும்...
தஞ்சம் பிறிதில்லை...
பாலினும் சொல்லினியாய்...
நாயேனையும் இங்கொரு...
தங்கச்சிலை கொண்டு...
தேறும்படி சில...
வீணே பலி...
ககனமும் வானும்...
வல்லபம் ஒன்றறியேன்...
தோத்திரம் செய்து...
பாரும் புனலும்...
தனம் தரும்...
கண் களிக்கும்...
அழகுக்கு ஒருவரும்...
என் குறைதீர...
தாமம் கடம்பு...
நயனங்கள் மூன்றுடை...
தங்குவர் கற்பகத்தாருவின்...
குறித்தேன் மனத்தில்....
பயிரவி பஞ்சமி...
செப்பும் கனகக்கலசமும்...
விழிக்கே அருளுண்டு...
கூட்டியவா என்னை...
அணங்கே அணங்குகள்...
►
செப்டம்பர்
(21)
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை