skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/08/22
என் குறைதீர...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி:நூல் 72 ராகம்: சுத்த தன்யாசி
என் குறைதீர நின்றேத்து கின்றேன் இனியான் பிறக்கின்
நின் குறையே யன்றி யார்குறை காணிரு நீள்விசும்பில்
மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்
தன் குறைதீர எங்கோன் சடைமேல் வைத்த தாமரையே.
அகண்ட வானத்தில் தோன்றும் மின்னலைக் குறை சொல்லும் அளவுக்கு மெலிந்த இடையைக் கொண்ட மென்மையானவளே, அபிராமி, எம் தந்தை சிவபெருமானே தன் பிழைகளைப் பொறுத்தருளும்படி உன் பாதங்களையே தாமரை மலராய் மதித்துத் தலைமேல் வைத்திருக்கிறார்; என் பிழை பொறுக்கவும், பிறவாமை வேண்டியும், உன்னை வணங்கிக் கொண்டிருக்கிறேன்; நான் மீண்டும் பிறவி எடுக்க நேர்ந்தால் அது உன்னுடைய பிழையே தவிர, என் பிழையோ வேறு எவருடைய பிழையோ ஆகாது.
அருஞ்சொல் எதுவுமில்லாத எளிய பாடல். தோன்றி மறையும் மின்னலைவிட மெல்லிடை கொண்டவள் என்பது சுவையான கற்பனை.
அபிராமியைப் பற்றியபின் குறையொன்றும் வராது என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொண்டவர், இந்தப் பாடலில் ஒரு படி மேலே செல்கிறார். 'மூளுகைக்கு என் குறை நின் குறையே' என்று முன்னமே சொல்லியிருந்தாலும், இந்தப் பாடலில் தெளிவாகச் சொல்லிவிட்டார். "இதோ பாரம்மா அபிராமி, உன்னை விட்டால் எனக்கு வேறு கதி கிடையாது; நான் எளியவன், சிறியவன், திறமையற்றவன். உன் பாதங்களைக் கொழு கொம்பெனப் பற்றி இனிப் பிறவாமை வேண்டுமெனக் கேட்டு, 'மதியுறு வேணி மகிழ்நனும், கமலாலயனும், மாலும் இன்னும் மற்ற தேவர்களும் துதியுறு சேவடியாய்' என்று தினமும் உன் தாமரையடிகளையே போற்றி வணங்கிக் கொண்டிருக்கிறேன். நான் மட்டுமல்ல என் அப்பன் சிவனும் வேண்டுகிறான். அவனுக்கு பிறவாமை இல்லை. எனக்கு மட்டும் பிறப்பு வந்தால், அது உன் குறை தான்" என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார்.
ஒருவருக்கு செய்முறையோ விளக்கமோ ஆணையோ கொடுக்க வேண்டுமானால், தேவையையும் எதிர்பார்ப்பையும் தெளிவாக விளக்கிச் சொல்ல வேண்டும்; எதிர்பார்த்தபடி செயல்படாவிட்டால் என்னாகுமென்றும் விளக்க வேண்டும். அடிப்படைத் தகவல் பயிற்சி. குழப்பமே வரக்கூடாது. அதைத்தான் பட்டர் செய்திருக்கிறார். இது வரை உவமையும் உருவகமும் கொண்டு பாடியவருக்கு சந்தேகம் வந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை. சிறிய குழந்தைக்கு விளக்குவதைப் போல அபிராமிக்கு விளக்கி விட்டார். 'இனி நான் பிறந்தால் அது உன்னுடைய தவறு, ரெஸ்ட் மை கேஸ் யுவர் ஆனர்'.
இந்தக் கட்டத்தில், பட்டருக்கு இனி நடக்கப் போவது தெரிந்திருக்கும் என்று தோன்றுகிறது. 'பிறவாமை வேண்டும்' என்று தொடர்ந்து பாடியவர், இந்தப் பாடலோடு நிறுத்திக் கொண்டு விட்டார். இனிவரும் பாடல்களில் பிறவாமை பற்றி எதுவுமே இல்லை; ஒரே ஒரு பாடலில் 'எனக்குப் பிறவாமை கிடைத்தது போல் மற்ற அடியவருக்கும் கிடைக்கும்' என்றும் பாடியிருக்கிறாரே தவிர, பிறவாமை கோரிக்கை வைப்பது இது தான் கடைசி. இனி வரும் பாடல்கள் பெரும்பாலும் அபிராமியைக் காணப்போகும் அல்லது கண்ட ஆனந்தம் மட்டுமே வெளிப்படுகிறது. 'இறக்கும் தறுவாயில் என் முன்னே வர வேண்டும்' என்பதைத் தவிர, வேறு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை.
ராமாயணக் காட்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. சரபுங்க முனிவர் செய்தப் பெருந்தவங்களை மெச்சி பிரம்மன் அவருக்கு பிரம்மலோகப் பதவி தருவதாகச் சொல்லி அழைத்து வர இந்திரனை அனுப்புகிறான். 'நோ தேங்க் யூ, நத்திங் டூயிங்' என்கிறார் சரபுங்கர். ஏமாற்றத்துடன் வெளியே வருகிறான் இந்திரன். வரும் வழியில் அந்தப்பக்கம் வந்து கொண்டிருக்கும் சீதா, ராம, லட்சுமணர்களைப் பார்க்கிறான். வணங்கி விட்டு செய்தி சொல்லிப் போகிறான். இந்திரனை விசாரித்த ராமன் மட்டும் தனியே சரபுங்கரைப் பார்க்கப் போகிறான். ராமனை அடையாளம் கண்ட முனிவர் திக்குமுக்காடிப் போய், 'ஐயா, உன் மனைவி, சகோதரன் எங்கே? அவர்களையும் அழைத்து வா' என்கிறார். ராமனும் சீதை லட்சுமணனை அழைத்து வருகிறான். மூவரையும் கண்குளிரக் கண்ட சரபுங்கர், விழுந்து வணங்குகிறார். உடனே தீ மூட்டி குதிக்கப் போகிறார். அவரைத் தடுத்த ராமன், "ஐயா, என்ன இது? எங்களை உள்ளே வரச்சொல்லிப் பார்த்தீர்... தொழுதீர்... தீமூட்டி விழுதீர்? இது என்ன புதுமை? உட்காரச் சொல்லவில்லை, ஒரு குளிர் பானம் கூடத் தரவில்லை?" என்று கேட்கிறான். சரபுங்கர் சொல்கிறார், "அசல் உலக நாயகனே, ஐயா, உன்னைப் பார்த்த பிறகு உயிர் போய் விட வேண்டும்; இனி எதுவும் தேவையில்லை. பிரம்மலோகம் கூட வேண்டாம் என்று துறந்தவன் நான்; உன் பார்வையும் பாதமும் பட்டதும் எனக்குப் பிறவாமை கிடைத்து விட்டது. இனி நான் செய்ய வேண்டியது எதுவுமே இல்லை. டாடா" என்று தீயில் விழுகிறார்.
கடவுளைக் கண்டவுடன் எத்தனையோ வரங்களைக் கேட்கலாம்; ஒன்றுமே கேட்காமல் பிறவாமை கிடைத்த பயனுடன் உயிரையும் விடலாம். கடவுளைக் கண்டவுடன் பிறவாமை கிட்டியதென்று உயிர் துறப்பது, முதிர்ந்த முனிவர்களின் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. பட்டரும் அப்படித் தான் போல. அபிராமியைக் கண்டதுமே பிறவாமை கிடைத்து விடும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்.
பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
►
ஜூலை
(31)
▼
ஆகஸ்ட்
(31)
அரணம் பொருள்...
வையம் துரகம்...
சின்னஞ் சிறிய...
இல்லாமை சொல்லி...
மின்னாயிரம் ஒரு...
ஒன்றாயரும்பிப் பலவாய்...
அய்யன் அளந்தபடி...
அருணாம் புயத்தும்...
தஞ்சம் பிறிதில்லை...
பாலினும் சொல்லினியாய்...
நாயேனையும் இங்கொரு...
தங்கச்சிலை கொண்டு...
தேறும்படி சில...
வீணே பலி...
ககனமும் வானும்...
வல்லபம் ஒன்றறியேன்...
தோத்திரம் செய்து...
பாரும் புனலும்...
தனம் தரும்...
கண் களிக்கும்...
அழகுக்கு ஒருவரும்...
என் குறைதீர...
தாமம் கடம்பு...
நயனங்கள் மூன்றுடை...
தங்குவர் கற்பகத்தாருவின்...
குறித்தேன் மனத்தில்....
பயிரவி பஞ்சமி...
செப்பும் கனகக்கலசமும்...
விழிக்கே அருளுண்டு...
கூட்டியவா என்னை...
அணங்கே அணங்குகள்...
►
செப்டம்பர்
(21)
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை