skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/08/26
குறித்தேன் மனத்தில்....
நூறு நாளில் அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி:நூல் 76 ராகம்: பைரவி
குறித்தேன் மனத்தில் நின்கோல மெல்லாம் நின்குறிப் பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டு கிண்டி
வெறித்தே னவிழ் கொன்றைவேணிப் பிரானொரு கூற்றை மெய்யில்
பறித்தே குடி புகுதும் பஞ்சபாண பைரவியே.
ஐவகை மலரம்புகளை ஏந்திய சக்தியே, வண்டுகள் துளைக்கும் அளவுக்கு மயக்கும் தேனைக் கொண்ட கொன்றை மலர் மாலையை முடியில் அணிந்த சிவனுடைய உடலின் ஒரு பகுதியை உன்னுடன் சேர்த்துக் கொண்ட உனது அழகிய வடிவங்களை எண்ணிக் கொண்டிருந்தேன்; உன் திருவுளப்படியே எமன் என்னைத் தேடி வரும் வழியைத் தடை செய்து விட்டேன்.
'பஞ்ச பாண பைரவியே, வண்டு கிண்டி வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப்பிரான் மெய்யில் ஒரு கூற்றை பறித்தே குடி புகுதும் நின் கோலமெல்லாம் மனத்தில் குறித்தேன்; நின் குறிப்பறிந்து மறலி வருகின்ற நேர்வழி மறித்தேன்' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.
குறிப்பு என்றால் விருப்பம் என்று பொருளுண்டு. 'குறிப்பறிந்து' என்பது இங்கே அபிராமியின் விருப்பப்படி, 'பட்டருக்கு உதவும் திருவுளப்படி' என்ற பொருளில் வருகிறது. மறலி என்றால் எமன். மறல் என்றால் மரணம். மரணத்தைக் கொண்டு வருபவன் மறலி. கிண்டி என்பதற்கு துளைத்த என்று பொருள். வெறி என்றால் மயக்கம் என்று பொருளுண்டு. வேணி என்றால் சடை என்று பொருளுண்டு. கூறு என்றால் பிரிவு, பகுதி. இங்கே 'சிவனுடைய உடலில் ஒரு பாதியை' என்ற பொருளில் வருகிறது. பைரவி என்றால் வலிமையுடையவள், சக்தியுடையவள் என்று பொருள். அபிராமி தனக்கு உதவி செய்ய முன்வந்து விட்டாள் என்று பட்டர் உணர்ந்தது போல் பாடியிருக்கிறார்.
பயிரவி என்று நேர்சொல் இருப்பதாக என் சிற்றறிவுக்கு தெரியவில்லை. பயிரவி என்பது இங்கே பைரவியைக் குறிக்கிறது. அந்தாதித் தொடை காரணமாகவும் அடுத்த பாடலின் எதுகை காரணமாகவும் பைரவி, பட்டர் பாட்டில் பயிரவி ஆனாளென்று நினைக்கிறேன். பைரவி என்பது பைரவனின் பெண்பால் - வலிமையுடையவள் என்று பொருள். வயிரவி என்பதன் மருவாகக் கொள்ளலாம். வயிரவி என்பது வயிரவனின் பெண்பால். வயிரவன் என்றால் தலைவன், சிவன் என்று பொருள். வயிரவி என்பதற்கு ஒளிவீசுகிறவள் (வயிரம்:வைரம்) என்றும் பொருள்.
இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்கள் பைரவி ராகத்தில் அமைந்துள்ளன.
பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
►
ஜூலை
(31)
▼
ஆகஸ்ட்
(31)
அரணம் பொருள்...
வையம் துரகம்...
சின்னஞ் சிறிய...
இல்லாமை சொல்லி...
மின்னாயிரம் ஒரு...
ஒன்றாயரும்பிப் பலவாய்...
அய்யன் அளந்தபடி...
அருணாம் புயத்தும்...
தஞ்சம் பிறிதில்லை...
பாலினும் சொல்லினியாய்...
நாயேனையும் இங்கொரு...
தங்கச்சிலை கொண்டு...
தேறும்படி சில...
வீணே பலி...
ககனமும் வானும்...
வல்லபம் ஒன்றறியேன்...
தோத்திரம் செய்து...
பாரும் புனலும்...
தனம் தரும்...
கண் களிக்கும்...
அழகுக்கு ஒருவரும்...
என் குறைதீர...
தாமம் கடம்பு...
நயனங்கள் மூன்றுடை...
தங்குவர் கற்பகத்தாருவின்...
குறித்தேன் மனத்தில்....
பயிரவி பஞ்சமி...
செப்பும் கனகக்கலசமும்...
விழிக்கே அருளுண்டு...
கூட்டியவா என்னை...
அணங்கே அணங்குகள்...
►
செப்டம்பர்
(21)
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை