skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/08/19
தனம் தரும்...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி:நூல் 69 ராகம்: சஹானா
தனந்தரும் கல்வி தருமொரு நாளுந் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன வெல்லாந் தருமன்ப ரென்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமிக் கடைக்கண்களே.
செல்வம், கல்வி, சோர்வடையாத மனம், அழகான வடிவம், தீமை எண்ணாத உறவு நட்பு, இன்னும் பல நன்மைகளைத் தரும் பூங்குழலி அபிராமியின் கடைக்கண் பார்வை, அவள் அன்பர்களுக்கோ நிலையான பெருமையையும் தரும்.
அபிராமியை மாத்திரை போதும் மனதில் வையாதவர் பாத்திரமேந்தி பிச்சையெடுப்பர் என்று முதல் பாடலிலும், அபிராமியின் பாதங்களைச் சேர்ந்தவர்கள் அடையாத செல்வமே இல்லை என்று அடுத்த பாடலிலும் சொன்னவர், அபிராமியை வணங்கினால் பல வகை செல்வங்கள் கிடைக்கும் என்று இந்தப் பாடலில் விவரமாகச் சொல்கிறார்.
தனம், கல்வி, தளர்வறியா மனம், அழகு, நேர்மையான உறவினர், நண்பர் எல்லாம் சரி, 'சோறு எங்கே?' என்று கேட்பவருக்கு என்ன சொல்கிறார்? 'நல்லன எல்லாம் தரும்' என்பதில் அடங்கியிருப்பதாகச் சொல்கிறார்.
"என்னய்யா இது? அபிராமியை வழிபட்டால் இத்தனை நேரமும் பிறவாமை கிடைக்கும் என்று சொல்லிவிட்டு, இப்போது சாதாரண பணங்காசு, கல்வி, பிள்ளைகள் என்று இந்த உலகத்து நன்மைகள் கிடைப்பதாகச் சொல்கிறீர்களே? மீண்டும் இவற்றிலே சுழலுவோமே? பிறகு பிறவாமைக்கு என்ன வழி? அவ்வளவு தானா? பிறவாமை கிடையாதா?" என்று பட்டரைக் கேட்க தோன்றுகிறது.
பட்டர் பாடலைக் காவனிப்போம். என்ன சொல்கிறார்? அபிராமியை மட்டுமே எண்ணி வழிபடும் அன்பர்களுக்கோ இன்னும் கிடைக்கும் என்கிறார். கனம் தரும் என்கிறார் கடைசி வரியில். அது என்ன? கனம் தருவாளா? பருமனாக்குவாள் அபிராமி என்கிறாரா? கனம் என்ற சொல்லுக்கு நிறைவு, பெருமை, நிலை என்று பொருளுண்டு. அபிராமி அடியாருக்கு மட்டும் கனம் தருவாள், அதாவது நிலையான பெருமையை, பெரும்பேற்றைத் தருவாள் என்கிறார். இந்தச் செல்வங்களை அனுபவிப்பதால் மனம் பேதலிக்காமல் நிலையடையச் செய்வாள் அபிராமி என்றும் பொருள் கொள்ளலாம். 'கடைக்கண் பார்வைக்கே இத்தகைய செல்வங்கள் கிடைத்தால், பாதங்களைத் தழுவும் அண்மைக்கு இன்னும் எத்தகைய செல்வங்களை வழங்குவாள் அபிராமி என்று நினைத்துப் பாருங்கள்' என்று பட்டர், பக்தர்களுக்குச் சவால் விடுவதாகவும் பொருள் கொள்ளலாம்.
சுவையான பாடல்.
பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
►
ஜூலை
(31)
▼
ஆகஸ்ட்
(31)
அரணம் பொருள்...
வையம் துரகம்...
சின்னஞ் சிறிய...
இல்லாமை சொல்லி...
மின்னாயிரம் ஒரு...
ஒன்றாயரும்பிப் பலவாய்...
அய்யன் அளந்தபடி...
அருணாம் புயத்தும்...
தஞ்சம் பிறிதில்லை...
பாலினும் சொல்லினியாய்...
நாயேனையும் இங்கொரு...
தங்கச்சிலை கொண்டு...
தேறும்படி சில...
வீணே பலி...
ககனமும் வானும்...
வல்லபம் ஒன்றறியேன்...
தோத்திரம் செய்து...
பாரும் புனலும்...
தனம் தரும்...
கண் களிக்கும்...
அழகுக்கு ஒருவரும்...
என் குறைதீர...
தாமம் கடம்பு...
நயனங்கள் மூன்றுடை...
தங்குவர் கற்பகத்தாருவின்...
குறித்தேன் மனத்தில்....
பயிரவி பஞ்சமி...
செப்பும் கனகக்கலசமும்...
விழிக்கே அருளுண்டு...
கூட்டியவா என்னை...
அணங்கே அணங்குகள்...
►
செப்டம்பர்
(21)
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை