skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/08/11
நாயேனையும் இங்கொரு...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி:நூல் 61 ராகம்: ஆபேரி
நாயே னையுமிங்கொரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயே னறியுமறிவு தந்தாய் என்னபேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண் மால்திருத் தங்கச்சியே.
மலையரசன் இமவான் மகளே, திருமாலின் தங்கையே, என் தாயே! நாயைப் போல் எளியவனான என்னை ஒரு பொருட்டாக மதித்து விரும்பி ஏற்றுக்கொண்டதுடன் (நில்லாமல்), அறிவில்லாத எனக்கு உன் இயல்பை அறிந்து கொள்ளும் அறிவையும் கொடுத்தது நான் பெற்ற பெரும் பேறாகும்.
அபிராமியின் அருள் தனக்குக் கிடைத்தது தகுதிக்கு மீறிய சலுகை என்று தொடர்ந்து பாடுகிறார் பட்டர். நாய் என்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு சொல்கிறார். சுயமாகச் சிந்திக்கும் அறிவில்லாமல் சோறு போட்ட இடம் சொர்க்கமென நினைக்கும் ஐந்தறிவுப் பிராணியைப் போன்ற தன்னை ஒரு பொருட்டாக மதித்து விரும்பி ஏற்றுக் கொண்ட அபிராமியிடம் விசுவாசமுள்ள நாய் என்கிறார்.
கீழ்த்தரமான நிலையைக் குறிக்க நாயை உவமையாகவும் உதாரணமாகவும் காட்டி, நிறைய இறையிலக்கியங்களில் பாடியிருக்கிறார்கள். நாயிற் கடை, அடி நாயேன் என்று தடுக்கி விழுந்தால் அங்கங்கே திருவாசகத்தில் 'நாயேன்' என்று வருகிறது. திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ் என்று எதைப் படித்தாலும் வெறிநாய், சொறிநாய், கேடுகெட்ட நாய், அந்தநாய், இந்தநாய் என்று வாயில்லாப் பிராணியைப் புரட்டி எடுத்திருக்கிறார்கள். நாயையும், அதற்கடுத்து பெண்ணையும், எவ்வளவு கேவலமாகச் சொல்ல முடியுமோ சொல்லிவிட்டு அதே வீச்சில் இறையருள் கேட்டு பாடலை முடிப்பதைக் காணலாம். ஐந்தறிவுப் பிராணி வாயில்லா ஊமை; ஆறறிவுப் பிராணியோ வாயிருந்தும் ஊமை.
பேய் என்ற சொல்லுக்கு அறிவிலி என்று பொருள். என்ன செய்கிறோம் என்ற நினைவு இல்லாது செயல் புரியும் நிலைக்கு பேய்த்தனம் என்று பெயர். (அறிவு பேதலித்துப் போனவரை அந்த நாளில் கோவிலில் இருத்தி கடவுளை வேண்டிப் பாடுவார்களாம்; பேயோட்டும் சடங்கு இப்படித் தொடங்கி விபரீதமானது)
அபிராமியை உள்ளபடி அறிந்துகொள்ளும் அறிவு பெற்றதற்காக நெகிழ்ந்து, அதன் மெருகை மேம்படுத்திக் காட்டுவதற்காக, அறிவில்லாத நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு பட்டர் பாடியிருப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.
இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்கள் ஆபேரி ராகத்தில் அமைந்திருக்கின்றன.
பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
►
ஜூலை
(31)
▼
ஆகஸ்ட்
(31)
அரணம் பொருள்...
வையம் துரகம்...
சின்னஞ் சிறிய...
இல்லாமை சொல்லி...
மின்னாயிரம் ஒரு...
ஒன்றாயரும்பிப் பலவாய்...
அய்யன் அளந்தபடி...
அருணாம் புயத்தும்...
தஞ்சம் பிறிதில்லை...
பாலினும் சொல்லினியாய்...
நாயேனையும் இங்கொரு...
தங்கச்சிலை கொண்டு...
தேறும்படி சில...
வீணே பலி...
ககனமும் வானும்...
வல்லபம் ஒன்றறியேன்...
தோத்திரம் செய்து...
பாரும் புனலும்...
தனம் தரும்...
கண் களிக்கும்...
அழகுக்கு ஒருவரும்...
என் குறைதீர...
தாமம் கடம்பு...
நயனங்கள் மூன்றுடை...
தங்குவர் கற்பகத்தாருவின்...
குறித்தேன் மனத்தில்....
பயிரவி பஞ்சமி...
செப்பும் கனகக்கலசமும்...
விழிக்கே அருளுண்டு...
கூட்டியவா என்னை...
அணங்கே அணங்குகள்...
►
செப்டம்பர்
(21)
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை