skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/08/01
அரணம் பொருள்...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி:நூல் 51 ராகம்: சாரங்கா
அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர்தங்கள்
முரண் அன்றழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் எனநின்ற நாயகி தன்னடியார்
மரணம் பிறவி இரண்டுமெய்தார் இந்த வையகத்தே.
கொற்றம், செல்வம், கோட்டை என அழியக்கூடியவற்றை பெரிதென எண்ணி அழியாச்செல்வமான அருளில்லாமல் திரிந்த முப்புர அசுரர்களின் அறியாமையை அழித்த உயர்ந்த கடவுளரான சிவபெருமானும் திருமாலுமே தஞ்சம் கேட்டு வணங்குகிற தலைவியின் (அபிராமியின்) அடியார்களுக்கு, மரணம் பிறவி இரண்டுமில்லை.
கடவுளரே பணிந்து வணங்கும் அபிராமியை வணங்கினால் பிறவாநிலை கிடைக்கும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறார் பட்டர். பிறவி எடுத்தவர் அனைவருமே பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு அந்தச் சுழற்சியில் தறிகெட்டு நெறிகெட்டு அருள் மறக்கவும் இழக்கவும் வாய்ப்பிருக்கிறது. இவற்றிலிருந்து விடுபட்டுக் கரையேற ஒரு பிடிப்பு மட்டுமல்ல, மீண்டும் அத்திசையில் செல்லாதிருக்கச் சிறந்த பாதுகாப்பும் தேவை; அந்தப் பாதுகாப்பு அபிராமியின் பாதங்கள் மட்டுமே என்பதை உட்கருத்தாக உரைத்திருக்கிறார்.
புராணத்தில் முப்புர அசுரர்கள் சிவ பக்தர்களாகவும் ஒழுக்க நெறி வழுவாதவராகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். கடுந்தவம் பல புரிந்து, கடவுள் தோன்றியதும், அவர்கள் கேட்ட வரம் மிகச் சாதாரணமானது - மரணம் வரக்கூடாது என்பதே. அது இயலாதென்று தெரிந்ததும் இன்னும் சாதாரணச் செல்வங்களான பொன், வெள்ளி, பித்தளையால் செய்யப்பட்ட மனம் போன போக்கில் போகும் நகரங்களை வரமாகப் பெற்றார்கள். நல்லொழுக்கம் கொண்ட அசுரர்கள் பொருளுக்காகத் தவமிருக்காமல் அருளுக்காகத் தவமிருந்திருக்கலாமே என்று நினைக்கும் பொழுது அவர்களின் முரண் - அறியாமை - வெளிப்படுகிறது. இறைவனுடைய அருள் என்பதே அழியக் கூடியது தான்; பிறவி என்று ஒன்று இருக்கும் வரை. மற்ற அசுரர்களைப் போல் கொடுமை செய்யாவிட்டாலும், பொருளுக்காக ஏங்கி உண்மையான தவப்பலனை இழந்த அறியாமையை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். பிறவி என்று ஒன்று இருக்கும் வரை பிறவியை ஒட்டிய வாழ்வு, தாழ்வு, பாவம், புண்ணியம், மரண பயம் என்ற அறியாமைச் சுழலில் அமுங்கிக் கிடப்போம் - அதனால் அபிராமியைச் சரணடைந்தால் பிறவாமை எனும் விடுதலை கிடைக்கும் என்கிறார் பட்டர்.
பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
►
ஜூலை
(31)
▼
ஆகஸ்ட்
(31)
அரணம் பொருள்...
வையம் துரகம்...
சின்னஞ் சிறிய...
இல்லாமை சொல்லி...
மின்னாயிரம் ஒரு...
ஒன்றாயரும்பிப் பலவாய்...
அய்யன் அளந்தபடி...
அருணாம் புயத்தும்...
தஞ்சம் பிறிதில்லை...
பாலினும் சொல்லினியாய்...
நாயேனையும் இங்கொரு...
தங்கச்சிலை கொண்டு...
தேறும்படி சில...
வீணே பலி...
ககனமும் வானும்...
வல்லபம் ஒன்றறியேன்...
தோத்திரம் செய்து...
பாரும் புனலும்...
தனம் தரும்...
கண் களிக்கும்...
அழகுக்கு ஒருவரும்...
என் குறைதீர...
தாமம் கடம்பு...
நயனங்கள் மூன்றுடை...
தங்குவர் கற்பகத்தாருவின்...
குறித்தேன் மனத்தில்....
பயிரவி பஞ்சமி...
செப்பும் கனகக்கலசமும்...
விழிக்கே அருளுண்டு...
கூட்டியவா என்னை...
அணங்கே அணங்குகள்...
►
செப்டம்பர்
(21)
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை