skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/08/18
பாரும் புனலும்...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி:நூல் 68 ராகம்: சஹானா
பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் முருகுசுவை ஒளிஊறு ஒலியொன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவமுடையார் படையாத தனமில்லையே.
நீர் நிலம் தீ வளி வானம் என அனைத்து நிலைகளுமாய்ப் பரந்தவளும், மணம் சுவை ஒளி தீண்டல் ஓசை என இத்தன்மைகள் ஒருங்கே சேர்ந்தவளும், சிவனின் ஆசை நாயகியுமான அபிராமியின் பாதங்களை அடைந்தவர்கள் பெற இயலாத செல்வமெதுவுமில்லை.
'அபிராமியை நினைக்காவிட்டால் நாய் படாத படுவர்' என்று முந்தைய பாடலில் வன்மையாகப் பயமுறுத்தியவர், இந்தப் பாடலில் 'அபிராமியை வணங்குவோர் எல்லாச் செல்வங்களையும் பெறுவர்' என்று மென்மையாகச் சொல்கிறார். அறம் பாடும் பட்டரை விட, வரம் பாடும் பட்டர் பெட்டர் என்று படுகிறது.
பார்: நிலம், புனல்:நீர், கனல்:தீ, கால்:காற்று, விசும்பு: ஆகாயம். முருகு என்றால் அழகு, மணம் என்று பொருள். (அழகனென்பதால் முருகனா, முருகனென்பதால் அழகனா?) ஊறு என்றால் தீண்டல், தொடல், ஸ்பரிசம் என்று பொருள். இவ்வுலகில் நாம் எதிர்கொள்ளும் நிலை, தன்மை அனைத்துமே அபிராமி தான் என்கிறார் பட்டர். அத்தகைய அபிராமியின் சிறப்பான பாதங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கிடைக்காத செல்வம் எதுவுமே இல்லை என்று வலியுறுத்துகிறார். 'ஐயா, கிடைக்காத செல்வமே இல்லையென்கிறீரே, அவை யாவை என்று சொல்லக்கூடாதா?' என்று யாரும் கேட்டுவிடக்கூடாதே என்று அச்செல்வங்களை வரும் பாடலில் விளக்குகிறார்.
சிவகாம சுந்தரியின் பெயர்க்காரணம் சுவையான, சிருங்காரப் புராணக்கதை. சிவராத்திரியின் பின்னணி. எரிந்த மன்மதனின் மலரம்புகளை எடுத்துக் கொண்டு பார்வதி சிவனைச் சந்தித்த ராத்திரி சிவராத்திரி. மன்மதனின் ஐந்து மலரம்புகள் ஒவ்வொன்றும் சிவனுக்கு ஏற்படுத்திய உபாதைகளையும் சிவன் விழித்திருந்த காரணத்தையும் புராணத்தில் படிக்கலாம்.
பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
►
ஜூலை
(31)
▼
ஆகஸ்ட்
(31)
அரணம் பொருள்...
வையம் துரகம்...
சின்னஞ் சிறிய...
இல்லாமை சொல்லி...
மின்னாயிரம் ஒரு...
ஒன்றாயரும்பிப் பலவாய்...
அய்யன் அளந்தபடி...
அருணாம் புயத்தும்...
தஞ்சம் பிறிதில்லை...
பாலினும் சொல்லினியாய்...
நாயேனையும் இங்கொரு...
தங்கச்சிலை கொண்டு...
தேறும்படி சில...
வீணே பலி...
ககனமும் வானும்...
வல்லபம் ஒன்றறியேன்...
தோத்திரம் செய்து...
பாரும் புனலும்...
தனம் தரும்...
கண் களிக்கும்...
அழகுக்கு ஒருவரும்...
என் குறைதீர...
தாமம் கடம்பு...
நயனங்கள் மூன்றுடை...
தங்குவர் கற்பகத்தாருவின்...
குறித்தேன் மனத்தில்....
பயிரவி பஞ்சமி...
செப்பும் கனகக்கலசமும்...
விழிக்கே அருளுண்டு...
கூட்டியவா என்னை...
அணங்கே அணங்குகள்...
►
செப்டம்பர்
(21)
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை