skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/07/04
கொள்ளேன் மனத்தில்...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
நூல்:23 | ராகம்:கானடா
கொள்ளேன் மனத்தில்நின் கோலமல்லா தன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்
குள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்குங்களியே அளியவென் கண்மணியே.
என் கண்ணின் மணி போன்றவளே, உன் திருக்கோலத்தைத் தவிர எந்தக் காட்சியையும் மனதில் காணேன்; உன் அடியார்களின் துணையை பிரியேன்; உன்னை வணங்காத பிற மதங்களை விரும்பேன்; (ஏனெனில்) பரந்து விரிந்த மூன்று உலகத்தின் உள்ளும் அண்டமெனும் வெளியிலும் நிறைந்திருக்கும் நீயே என் மகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியை உண்டாக்கும் காரணமாகவும் இருக்கிறாய்.
முந்தைய பாடல்களின் தொடர்ச்சியாக, அபிராமியே எல்லா நிகழ்வுகளாகவும், நிகழ்வுகளின் காரணமாகவும் இருப்பதாகப் பாடுகிறார் பட்டர். அபிராமியை மனதில் நிறுத்தினால் ஏற்படும் களிப்புக்கு அளவும் எல்லையும் ஈடும் இல்லை என்பதே பாடலின் சாரம். கண்களுக்குக் காட்சி தெரியுமே தவிர கோலம் தெரியாது; கோலத்தைத் தெரிவிப்பது அறிவு. இங்கே அபிராமியே கண்ணின் மணியாக இருக்கும் பொழுது அவளைத் தவிர வேறொரு கோலமும் தன் உள்ளத்தில் இடம் பெற வாய்ப்பே இல்லை என்பதைத் தெரிவிக்கிறார் பட்டர். அப்படிப்பட்ட அபிராமியின் கோலம் உள்ளத்தில் ஏற்படுத்தும் மயக்க வைக்கும் அளவுகடந்த மகிழ்ச்சி, போதையூட்டும் கள்ளைப் போல், மூவுலகத்திலும் அதற்கப்பாற்பட்ட அண்டத்திலும் இல்லை என்று பட்டர் கருதுவதாக உட்பொருளைக் கொள்ளலாம். அபிராமியே எங்கும் நிறைந்திருப்பதால், இந்த மகிழ்ச்சி தொடர்ந்து நிலைக்கும் எனவும் பொருள் கொள்ளலாம்.
தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
>>>
நூல் 24 | மணியே மணியின்...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
▼
ஜூலை
(31)
உறைகின்ற நின்...
மங்கலை செங்கலச...
கொடியே இளவஞ்சி...
கொள்ளேன் மனத்தில்...
மணியே மணியின்...
பின்னே திரிந்து...
ஏத்தும் அடியவர்...
உடைத்தனை வஞ்சப்பிறவியை...
சொல்லும் பொருளும்...
சித்தியும் சித்திதரும்...
அன்றே தடுத்தென்னை...
உமையும் உமையொருபாகனும்...
ஆசைக்கடலில் அகப்பட்டு...
இழைக்கும் வினைவழியே...
வந்தேசரணம் புகுமடியாருக்கு...
திங்கட் பகவின்...
பொருளே பொருள்முடிக்கும்...
கைக்கே அணிவது...
பவளக் கொடியில்...
ஆளுகைக்கு உந்தன்...
வாணுதற் கண்ணியை...
புண்ணியஞ் செய்தனமே...
இடங்கொண்டு விம்மி...
பரிபுரச் சீறடி...
தவளே இவளெங்கள்...
தொண்டு செய்யாது...
வெறுக்கும் தகைமைகள்...
வாழும் படியொன்று...
சுடருங் கலைமதி...
குரம்பை அடுத்து...
நாயகி நான்முகி...
►
ஆகஸ்ட்
(31)
►
செப்டம்பர்
(21)
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை