skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/06/15
மனிதரும் தேவரும்...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
நூல்:4 | ராகம்:பூபாளம்
மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்தப்
புனிதரும் நீயுமென் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
மனிதர்களும் தேவர்களும் மரணமில்லாத மார்க்கண்டேயரும் பணிந்து வணங்கும், மாணிக்கம் போன்ற சிவந்த பாதங்களை உடையவளே! கொன்றை மலர், குளிர்ச்சி தரும் நிலவு, பாம்பு, கங்கை நதி - இவற்றைத் தன் வார் போல் நீண்ட சடை மேல் தரித்திருக்கும் தூயவரான சிவனும், நீயும் என்றென்றும் என் சிந்தையில் தங்க வேண்டுகிறேன்.
புந்தி: மனம், சிந்தை
எளிமையான பாடல். பிரித்துப் போட வேண்டிய அவசியமே இல்லை. அபிராமியின் பாதங்களைத் தஞ்சமடைந்தவர், சிவபெருமானையும் துணைக்கு அழைப்பது ஏனென்று மட்டும் புரியவில்லை.
மாயா முனிவர் என்பதற்கு 'தவமுனிவர்கள்' என்று பலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'மாயா' என்ற சொல்லுக்குத் தமிழிலும் வடமொழியிலும் பொய்மை, உண்மையற்ற நிலை என்று பொருள் சொல்லியிருக்கிறது. தவம் என்ற பொருளைக் காணோம். 'மாயா முனிவர்' என்பதற்குத் 'தவமுனிவர்கள்' பொருந்தவில்லை. கடவூர்க் கோவிலில் இருப்பவர் மாளா முனிவர் - மார்க்கண்டேயர். அவரைத்தான் மாயா முனிவர் என்று பட்டர் பாடியிருக்கிறார். மாளா என்பது ஓசை நயம் கருதி மாயா என்றானதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. (இந்தக் கருத்தைச் சொன்னவர் திருமதி தேவகி முத்தையா - வழிமொழிகிறேன்).
தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
>>>
நூல் 5 | பொருந்திய முப்புரை...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
▼
ஜூன்
(17)
அறிந்தேன் எவரும்...
மனிதரும் தேவரும்...
பொருந்திய முப்புரை...
சென்னி அது...
ததியுறு மத்தின்...
சுந்தரி எந்தை...
கருத்தன எந்தை...
நின்றும் இருந்தும்...
ஆனந்தமாய் என்...
கண்ணியது உன்...
பூத்தவளே புவனம்...
வந்திப்பவர் உன்னை...
தண்ணளிக்கு என்று...
கிளியே கிளைஞர்...
அதிசயமான வடிவுடையாள்...
வவ்விய பாகத்து...
வெளிநின்ற நின்...
►
ஜூலை
(31)
►
ஆகஸ்ட்
(31)
►
செப்டம்பர்
(21)
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை