skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/06/17
சென்னி அது...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
நூல்:6 | ராகம்:பிலஹரி
சென்னியதுன் பொற் திருவடித் தாமரை சிந்தையுள்ளே
மன்னியதுன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னியநின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியதென் றுமுந்தன் பரமாகம பத்ததியே.
குங்கும நிறத்தவளே! தாமரை போல் மென்மையான, தங்கம் போல் ஒளிவீசும், உன் பாதங்களை என் தலையால் தாங்க வேண்டும்; உன் அடியார்களுடன் சேர்ந்து நீ அருளிய ஒழுக்க நெறிகளை நான் போற்றிப் பேண வேண்டும்; உன் பெயர்களை மந்திரமாக மனதில் இருத்தி நாளும் நான் ஓத வேண்டும். (இதற்கு அருள் செய்).
பத்ததி: விதி, கட்டளை, ஆணைகளை விவரிப்பது
முன்னுதல்: சேர்தல், இணைதல்
பன்னுதல்: புகழ்தல், பேசுதல்
மன்னுதல்: எண்ணுதல், மறவாதிருத்தல்
எளிமையான பாடல் போல் தோன்றுகிறது. ஆனால் இந்தப் பாடலின் பின்னே ஒரு நுட்பம், சூட்சுமம், சிறப்பு, இருக்கிறது.
சௌந்தர்யலஹரிக்கும் அபிராமி அந்தாதிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக முன்னர் எழுதியிருந்தேன். லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரியிலிருந்து நிறையவே எடுத்துக் காட்டியிருக்கிறார் பட்டர். பாராட்ட வேண்டிய செயல். வடமொழியில் புதைந்து போயிருக்க வேண்டியவற்றை நல்ல தமிழில் எடுத்துச் சொன்னதற்காக. இரண்டுமே திரிபுரசுந்தரியைப் பற்றியது. லலிதா சஹஸ்ரநாமத்தில் திரிபுரசுந்தரியின் ஸ்ரீவித்யா மந்திரம் பற்றி வருகிறது. இங்கே அது தான் திருமந்திரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (ஸ்ரீ=திரு; வித்யா=அறிவு, மந்திரம்).
வேறே என்ன சூட்சுமம்? ஸ்ரீவித்யா மந்திரங்களின் ஆதாரம் ஸ்ரீசக்ரம் எனப்படும் ஒரு தந்திர யந்திரம். ஸ்ரீசக்ர யந்திரத்தை மனதில் இருத்தி பலவாறாக வழிபடவேண்டும் என ஸ்ரீவித்யா வழிபாட்டு முறையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் திருமந்திரத்தின் அடிப்படையான ஸ்ரீசக்ரத்தை மனதில் இருத்தும் பொழுது, திரிபுரசுந்தரியைத் தனியாக அழைப்பது முறையாகாது; சிவ-சக்தி வடிவாகச் சொல்லப்பட்டிருப்பதால், சிவனும் சக்தியும் சேர்ந்தால் தான் ஸ்ரீசக்ரம். சிவன் இல்லாமல் சுந்தரியின் திருமந்திரத்தை நினைத்தும் பயனில்லையே? அதனால் தான் இரண்டு பாடல்களுக்கு முன் 'சிவபெருமானோடு சேர்ந்து வா' என்று அபிராமியை அழைத்தார் பட்டர். இருவரையும் முறையாக அழைத்து விட்டு, இந்தப் பாடலில் திருமந்திரத்தை ஓதுவதாகச் சொல்கிறார். பாடல்களிலும் ஒரு செயல்முறை வரிசையைப் புகுத்தியிருக்கிறார். அது தான் சூட்சுமம். (இந்தப் பாடலைப் பற்றி எழுதும் பொழுது தான் எனக்கும் புரிந்தது).
தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
>>>
நூல் 7 | ததியுறு மத்தின்...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
▼
ஜூன்
(17)
அறிந்தேன் எவரும்...
மனிதரும் தேவரும்...
பொருந்திய முப்புரை...
சென்னி அது...
ததியுறு மத்தின்...
சுந்தரி எந்தை...
கருத்தன எந்தை...
நின்றும் இருந்தும்...
ஆனந்தமாய் என்...
கண்ணியது உன்...
பூத்தவளே புவனம்...
வந்திப்பவர் உன்னை...
தண்ணளிக்கு என்று...
கிளியே கிளைஞர்...
அதிசயமான வடிவுடையாள்...
வவ்விய பாகத்து...
வெளிநின்ற நின்...
►
ஜூலை
(31)
►
ஆகஸ்ட்
(31)
►
செப்டம்பர்
(21)
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை